சிறார் ஆபாசப்படங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் மதுரையில் 2 பேர் போக்சோவில் கைது

மதுரை: மதுரையில் சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்திய அளவில் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என மத்திய அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை என அடுத்தடுத்து பல இடங்களில் இளைஞர்களை போலீ சார் கைது செய்ததனர்.

இதன் தொடர்ச்சியாக, மதுரையில் முதன்முறையாக ஆரப்பாளையம் பகுதியில் லாரி புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வரும் குமார் (40), இவரது நண்பர் செந்தில்குமார் (31) ஆகியோர் சமூக வலைத்தளம் மூலம் சிறார்களின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தும், அதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொண்டது, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரியவந்தது. அவர்கள் சோதனை செய்தபோது, அது உறுதியானது. இதுகுறித்து அவர்கள் மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து குமார், செந்தில்குமார் ஆகிய 2 பேரையும், போக்சோ சட்டத்தின் கீழ் மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: