×

டெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையின் போது மேலும் 3 பேர் இறந்ததால் இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலீஸார் வன்முறையை கலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு இடையே வடகிழக்கு டெல்லியில் மோதல் ஏற்பட்டு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்தக் கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது  25 ஆக உயர்வு உயர்ந்துள்ளது.

Tags : Delhi , Delhi, violence, killing, rise
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு