மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மலையடிவாரத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்கால மக்கள் வாழ்விடம் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் மதுரை பேராசிரியர், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன் தனது குழுவினருடன் சென்று கள ஆய்வு நடத்தினார். இதில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, பெருங்கற்கால மக்கள் வாழ்விடம் கண்டறிந்துள்ளனர். முனீஸ்வரன் கூறியதாவது: பேரையூர் மேற்குப்பகுதியில் கொப்பையா சுவாமி கோயிலின் மலை அடிவாரத்தில் கல்மேடு பகுதிகள், பெருங்கற்கால மக்கள் வாழ்விடம் கண்டறியப்பட்டன. அங்கு பெருங்கற்காலத்தில் தொடங்கி சங்க காலம் வரை 3 கட்டமாக வாழ்விடம் காணப்படுகிறது. புதைந்த நிலையில் சுமார் 30க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மேற்பரப்பில் உடைந்த நிலையிலும், புதைந்த நிலையிலும் உள்ளன. குறிப்பாக முதுமக்கள் தாழியின் உட்பகுதியின் கருப்பு சிவப்பு வண்ணத்திலான, மெல்லிய தடித்த பானை ஓடுகள் உடைந்த கல் வளையம் உள்ளது. ஒரு முதுமக்கள் தாழி சுமார் 84 செ.மீ விட்டம் 2 இஞ்ச் தடிமனில் உடையாத நிலையில் புதைந்து இருக்கிறது. மற்றொன்று இதைவிட சிறியதாக 60 செ.மீ விட்டத்திலும் ஒரு இஞ்ச் தடிமனில் உடைந்த நிலையில் இருக்கிறது. தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதி தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் உள்ளன.
மதுரை அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி மக்கள் வாழ்விடமும் கண்டுபிடிப்பு
- மதுரை ஆயிரம் ஆண்டு
- ஆயிரம் வயது முதிர்ந்த நண்டு ரிசர்வ்
- குடியிருப்பு
- பழைய குள்ள மக்கள்
- மதுரைக்கு அருகில் கண்டுபிடிப்பு