மதுரை - டெல்லி இடையே தினசரி விமான சேவை : நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிவிப்பு

மதுரை : மதுரையில் இருந்து டெல்லிக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத்தில் மேம்பாட்டு ஆலோசனைக்கு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமான நிலைய மேலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்ட முடிவுகள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் இந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சு. வெங்கடேசன், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் இயக்கப்பட்ட மதுரை - டெல்லி ஏர் இந்தியா விமானம் இனி தினசரி விமானமாக இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் ஓடுபாதையை விரிவுப்படுத்துவதற்கான பணிகள் ஜூன் மாதம் தொடங்கப்படும் என்றும் விரிவாக்க பணிக்காக நிலம் எடுக்கப்பட்டதற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, பெரிய விமானங்கள் மதுரை வந்து செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: