சென்னை: ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்பாக சபாநாயகர் தனபாலுடன் முன்னாள் எம்.எல்.ஏ. தங்க.தமிழ்ச்செல்வன் சந்தித்து பேசி வருகிறார். 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சபாநாயகர் தனபாலுடன் தங்க.தமிழ்ச்செல்வன் சந்தித்து பேசி வருகிறார்.