நெய்வேலி: நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர் ராஜேந்திரன் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடி விட்டனர். மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகளில் ஒன்று வெடித்து வீட்டில் இருந்த கார் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.