மே மாதத்துக்குள் கொரோனா கட்டுக்குள் வராவிடில் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்

டோக்கியோ: மே மாதத்துக்குள் கொரோனா கட்டுக்குள் வராவிடில் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு கப்பல் பயணிகள் மூலம் ஜப்பானுக்கும் பரவியுள்ளதால் ஒலிம்பிக் கமிட்டி முடிவு என தகவல் அளித்தது. டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்துக்கு மாற்றவோ, ஒத்திவைக்கவோ திட்டமில்லை எனவும் கூறியுள்ளனர்.

Related Stories: