×

வீட்டை உடைத்து நகை கொள்ளை

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் வீட்டை உடைத்து 5 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஆதம்பாக்கம், பெரியார்நகர், 2வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (60). இவர், சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

நேற்று முன்தினம் இவர் சைதாப்பேட்டையில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து மர்ம நபர்கள் 5 சவரன் நகையை கொள்ளையடித்தது தெரிந்தது. புகாரின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Jewelry robbery
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...