பெரம்பூர்: ஓட்டேரி ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (34), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று, 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் குளிப்பதை சுவர் மீது ஏறி நின்று போட்டோ எடுத்துள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணின் தாய் கூச்சலிட்டு அவரது செல்போனை பிடுங்கியுள்ளார். மேலும், இதுகுறித்து தலைமைச் செயலக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், ஆட்டோ டிரைவரின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, அதில், இளம்பெண் குளிப்பதை படம் எடுத்தது தெரிந்தது. இதையடுத்து, வினோத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.