×

இளம்பெண் குளிப்பதை படம் எடுத்த ஆட்டோ டிரைவர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (34), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று, 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் குளிப்பதை சுவர் மீது ஏறி நின்று போட்டோ எடுத்துள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணின் தாய் கூச்சலிட்டு அவரது செல்போனை பிடுங்கியுள்ளார். மேலும், இதுகுறித்து தலைமைச் செயலக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், ஆட்டோ டிரைவரின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, அதில், இளம்பெண் குளிப்பதை படம் எடுத்தது தெரிந்தது. இதையடுத்து, வினோத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (35), நேற்று கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது, அங்கிருந்த மர்ம நபர்கள் உருட்டுக்கட்டையால் இவரை தாக்கி, அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.
*  வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த தொழிலாளி சுரேஷ்குமார் (24), நேற்று முகப்பேரில் கட்டுமான பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
*  மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த பத்மநாபன் (31) என்பவர், பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால், மன உளைச்சலில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : Auto driver ,teenage girl , Auto driver arrested, shooting teenage girl
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...