சென்னை: தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சுமங்கலி (35). இவர், நேற்று முன்தினம் இரவு தனது கணவருடன் தி.நகரில் இருந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். தேனாம்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் சுமங்கலி கழுத்தில் கிடந்த 10 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.