பெண்ணிடம் 10 சவரன் பறிப்பு

சென்னை: தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சுமங்கலி (35). இவர், நேற்று முன்தினம் இரவு தனது கணவருடன் தி.நகரில் இருந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். தேனாம்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் சுமங்கலி கழுத்தில் கிடந்த 10 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.

இந்த சம்பவத்தில் பைக்கில் இருந்து கீழே விழுந்த சுமங்கலிக்கு காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திரும்பினார். பின்னர் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார்  சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ெகாள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: