சாகித்ய அகாடமி விருது பெறும் தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி: தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  சாகித்ய அகாடமி விருது பெறவுள்ள கே.வி.ஜெயஸ்ரீக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் பாராட்டு தெரிவித்துக்கொள்வதோடு, அவர் மென்மேலும் இதுபோன்ற பல விருதுகளைப் பெற அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

Related Stories: