திருச்சி: திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு தினமும் இரவு 12.30 மணிக்கு ஏர்ஏசியா விமானம் புறப்பட்டு செல்லும். நேற்றுமுன்தினம் ஏர்ஏசியா விமானம் கோலாலம்பூரில் இருந்து பயணிகளுடன் இரவு 11.40 மணிக்கு திருச்சி வந்தது. மீண்டும் மலேசியா செல்வதற்காக 127 பயணிகள் அனைத்து சோதனைகளும் முடித்து தயாராக இருந்தனர். அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்து இருந்தனர்.