கீழடியில் அகழாய்வு புகைப்பட கண்காட்சி

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. 5 நாட்கள் நடந்த அகழாய்வில் பானை ஓடுகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனிடையே அகழாய்வை காண வரும்  பார்வையாளர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக, தொல்லியல் துறையினர் 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை நேற்று முதல் கீழடியில் அமைத்துள்ளனர். தாழிப்பானை,  சூதுபவளம், அகழாய்வு பணி உள்ளிட்ட அனைத்தையும் புகைப்பட ஆவணமாக்கி கண்காட்சியாக வைத்துள்ளனர். பார்வையாளர்கள் இந்த புகைப்பட கண்காட்சியை கண்டு ரசிக்கின்றனர்.

Related Stories: