சேலம்: சேலம் தாதகாப்பட்டி குமரன் நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51). இவரது மகன் வினோத்குமார், ஓமலூர் பக்கமுள்ள மானத்தாள் தாண்டவனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(49). இவர்கள் மூவரும் இணைந்து சேலத்தில் ‘‘ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தினர். ₹1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ₹20ஆயிரம் வழங்கப்படும், இரட்டிப்பு பணம் தரப்படும் என ஆசை வார்த்தை கூறி 9 ஆயிரம் பேரிடம் ரூ.90 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி பாலசுப்பிரமணியம், சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான வினோத்குமாரை தேடி வருகின்றனர்.