கோவை-திருப்பதி ரயிலில் ஒரு ஏசி பெட்டி இணைப்பு

சென்னை: கோவை-திருப்பதி ரயிலில் தற்காலிமாக ஒரு ஏசி பெட்டியை இணைப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோவை-திருப்பதி-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்காலிமாக ஒரு ஏசி கோச் இணைக்கப்படுகிறது. இது 28.2.2020 முதல் 28.3.2020 வரை இருக்கும். இதேபோல் சம்பந்தப்பட்ட நாட்களில் திருப்பதி-பெங்களூரு-திருப்பதி இன்டர்சிட்டி  எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்காலிமாக ஒரு ஏசி பெட்டி இணைக்கப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: