காங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகள் நியமனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் விவேக் தன்கா ஆலோசனையின் படி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவுபடி தமிழக காங்கிரஸ் மனித உரிமை துறைக்கான 3 மாவட்ட தலைவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக மாங்காடு சேகர் பிரகாசமும், சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக ரோஷன் நவாசும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவராக ராஜசேகரும் நியமிக்கபட்டுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: