ஜெனீவா : பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகளவில் இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 43வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பலரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட் ஆகியோர் அடங்குவர். காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் மற்றும் அனைத்து சமூகங்களின் மனித உரிமைகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.