நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கொள்முதல் நிலையங்களில் ஆள்பற்றாக்குறையால் ஆயிரக்கணக்காக நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. அறுவடை செய்த நெல்லை விற்பதற்கு குறைந்தது ஒருவார காலம் காத்திருக்க வேண்டியதாக வேதாரண்யம் வட்டார விவசாயிகள் கூறுகின்றனர். நேரடி கொள்முத நிலையங்களில் விற்பனை செய்ய முடியாததால் குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள விவசாயி தெரிவித்ததாவது, 15 நாட்களாக நெல் மூட்டைகள் வேதாரண்யம் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை விற்பனை செய்யவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது ஆள்பற்றாக்குறை என கூறுகின்றனர். மேலும் இணையதள சேவை சரிவர செயல்படாத காரணத்தினால் பணம் கிடைப்பதிலும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அறுவடை செய்த நெல்களை கொள்முதல் நிலையத்தில் வைப்பதற்கு சரியான இடவசதி இல்லை.