திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 16 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீராம் பட்டுசேலை நிறுவனத்துக்கு சொந்தமான 16 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். ஆரணி கொசப்பாளையம் பகுதியில் ஸ்ரீராம் பட்டுசேலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை, வேலூர் மற்றும் ஆரணியில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் திடீரென ஸ்ரீராம் பட்டுசேலை நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.