திருவாரூர்: டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மார்ச் 7ஆம் தேதி திருவாரூரில் பாராட்டு விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா விவசாயிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.