சென்னை: தமிழக அரசு அலுவலக நடைமுறைகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளை ஆன்லைனில் செயல்படுத்த வலியுறுத்தி நிதித்துறைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக அரசு அலுவலர்கள் கூட்டமைப்புக்கு அரசின் நிதித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அரசு அலுவலகங்களில் காகிதப் பயன்பாட்டை குறைக்கவே அலுவலக நடைமுறைகளை ஆன்லைனில் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறினார்.