திருவொற்றியூர்: தீவிர மனஅழுத்தத்தில் இருந்த தந்தை, தனது மகளுடன் 2வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாதவரம், பொன்னியம்மன்மேடு, பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் திருப்பதி (35). இவர், பாரிமுனையில் ஒரு தனியார் கம்பெனியில் கான்ட்ராக்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுனிதா (26). இவர்களுக்கு ஹாரீஷ் (5) என்ற மகன், ஹாரிகா (4) என்ற மகள் உள்ளனர்.கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகள் காரணமாக திருப்பதி கடும் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் மையத்தில் சிகிச்சை பெற்று, கடந்த சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மீண்டும் தீவிர மன அழுத்தம் ஏற்பட்டதால், திருப்பதி தனது மகள் ஹாரிகாவை தூக்கிக் கொண்டு, தான் வசிக்கும் வீட்டின் 2வது மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது மகளுடன் கீழே குதித்தார். இதில் இருவரும் படுகாயமடைந்து, அலறி சத்தம் போட்டுள்ளனர்.சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தந்தையும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.தகவலறிந்து மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரின் சடலத்ைத கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.