போலி ஆவணம் தயாரித்து அடுத்தவர் வீட்டுமனையை விற்றவர் கைது

சென்னை: பெரம்பூரை சேர்ந்த கோபால் மகன் வெங்கடகிருஷ்ணன் (58). தெற்கு ரயில்வேயில் முதுநிலை பொறியாளர். இவர் திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் பிராஜோ நகரில் 2275 சதுர அடி வீட்டுமனை வங்கினார். அந்த நிலத்திற்கு சமீபத்தில் வில்லங்க சான்று பெற்று பார்த்தபோது, இவர் அனுபவத்தில் இருந்த வீட்டுமனையை சென்னை கொருக்குபேட்டையைச் சேர்ந்த அதே பெயருடைய கோபால் மகன் வெங்கடகிருஷ்ணன் (57) என்பவர் தன்னைப்போல் ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரித்தது தெரியவந்தது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அரவிந்தனிடம் புகார் செய்தார். அதன்பேரில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

அப்போது, இதில் தொடர்புடைய சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த குப்புசாமி மகன் நாகஜோதி (61), அதே பகுதியைச் சேர்ந்த மோகன் ஆகியோர் சேர்ந்து, சென்னை கொருக்குபேட்டையைச சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் பேரில் கையெழுத்திட்டு ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்திருப்பதும். அதை மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரை அணுகி போலி ஆவணங்கள் தயார் செய்து விற்றுத்தருமாறு பவர் அளித்துள்ளதும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து நாகஜோதி (61) என்பவரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வெங்கடகிருஷ்ணன், மோகன் மற்றும் வேலு ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: