சென்னை: பழவேற்காடு ஏரியில் அடுத்தடுத்து 2 பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் போலீசார் மீட்டனர். அவர்களை யாராவது கொலைசெய்து ஏரியில் வீசினார்களா என விசாரிக்கின்றனர்.பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக நேற்று முன்தினம் மாலை திருப்பாலைவனம் போலீசாருக்கு பழவேற்காடு கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் புகார் அளித்தார்.இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பாலைவனம் போலீஸ் எஸ்ஐ சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ஏரிக்குள் மிதந்த பெண்ணின் சடலத்தை மீனவர்கள் உதவியுடன் கைப்பற்றினர். பின்னர், அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலமாக மிதந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை ஏதேனும் கும்பல் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்று சடலத்தை ஏரிக்குள் வீசிவிட்டு சென்றார்களா அல்லது காதல் தோல்வியால் அப்பெண் தற்கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.