குளத்தூர்: குளத்தூர் அருகே வைப்பாறு மல்லம்மாள் கோயில் திருவிழாவில் பொங்கல் வைக்க பல்லாண்டுகளுக்கு பிறகு ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீரை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையையொட்டி அமைந்துள்ள வைப்பாறு கிராமத்தில் மல்லம்மாள் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிவராத்திரியன்று துவங்கி ஒரு வாரம் சிறப்பாக நடைபெறும்.
இதன்படி இந்தாண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி காலை அருகேயுள்ள சிப்பிகுளம் கடலுக்கு சென்று புனித நீராடிய பக்தர்கள், தீர்த்த குடங்களில் புனிதநீரை ஊர்வலமாக மேளத்தாளத்துடன் எடுத்து வந்து அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை கோயில் முன் பொங்கலிடும் பொருட்டு ஒரே வகையறாவை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் வைப்பாறு ஆற்றுக்கு சென்று ஊற்று தோண்டி பல்லாண்டுகளுக்கு பிறகு கிடைக்கப் பெற்ற தண்ணீரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதையடுத்து கோயில் முன் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.வைப்பாறு மல்லம்மாள் கோயில் திருவிழா கோலாகலம் ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீரை ஊர்வலமாக எடுத்துவந்த பக்தர்கள்: பல்லாண்டுகளுக்கு பிறகு பரவசம்
- வைப்புரு மல்லம்மல் கோயில் விழா யாத்ரீகர்கள்
- கோலகலம் நதி
- Parasaram
- வைபவாரம் மல்லம்மல் கோயில் விழா யாத்ரீகர்கள்
- கோல்கலம் நதி