ஆற்காடு: ஆற்காடு அருகே சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 மான்கள் பலியானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், ஆங்காங்கே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை என போராடி வருகின்றனர். அதேபோல், வனப்பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் வன விலங்குகள் தண்ணீருக்காக அருகே உள்ள ஊருக்குள் தஞ்சம் அடைகின்றது. அவ்வாறு ஊருக்குள் வரும் மான்கள் சாலையை கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் உயிரிழக்கும் சம்பவம் நாள்தோறும் நடந்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள தென்நந்தியாலம் பூஞ்சோலை நகர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3 மான்கள் சாலையை கடக்க முயன்றுள்ளது.