×

இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது.. இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.. மனதை நெகிழ வைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உரை

அகமதாபாத்: அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் சென்ற அதிபர் டிரம்ப்பிறகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் மொதேரா மைதானத்தின் நுழைவு வாயிலில் அதிபர் ட்ரம்பிற்கு ஒட்டகங்கப் படை வரவேற்பும்  அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. அரங்க மேடையில் அமெரிக்க அதிபரும் பிரதமர் மோடியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.இருநாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் தனது உரையை தொடங்கும் முன் நமஸ்தே டிரம்ப், டிரம்ப் நீடுழி வாழ்க என முழக்கமிட்டார் பிரதமர் மோடி.பிரதமர் மோடியை தொடர்ந்து அரங்கில் கூடியுள்ள மக்களும் நமஸ்தே டிரம்ப், டிரம்ப் நீடுழி வாழ்க என முழக்கமிட்டனர்.

*நமஸ்தே என்று கூறி உரையை துவக்கினார் டிரம்ப்

*இந்திய மக்களை அமெரிக்கா விரும்புகிறது. இந்திய மக்களை அமெரிக்கா மதிக்கிறது. இந்திய மக்களுக்கு ஒன்று கூற 8000 கிமீ பயணித்து வந்துள்ளோம். அமெரிக்கா எப்போதுமே இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும்.

*எங்களை வரவேற்க இந்த மைதானத்தில் 1.25 லட்சம் பேர் கூடியுள்ளனர்.இந்தியா எங்களுக்கு வழங்கிய விருந்தோம்பலை எப்போதும் மறக்க முடியாது. அமெரிக்கர்களின் மனதில் இன்று முதல் இந்தியா சிறப்பான இடம் பிடித்துவிட்டது

*டீ விற்பனையாளராக இருந்து நாட்டின் தலைவராகியுள்ளார் மோடி. மோடியை அனைவரும் விரும்புவார்கள் என்பது எனக்கு தெரியும். மோடியை அவ்வளவு சீக்கிரமாக கணிக்க முடியாது, அவர் கடினமானவர்.

*இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி.விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர்.இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி.

*இந்தியாவின் ஜனநாயகம் ஆச்சரியப்பட வைக்கும் வகையை சேர்ந்தது. இந்திய வரலாற்றில் மோடி தலைமையில் அனைத்து கிராமங்களும் மின் வசதியை பெற்றுள்ளது.

*இந்தியா ஒரு பொருளதார சக்தியாக உலக அரங்கில் உருவாகியுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஏழ்மை விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடாக திகழ்ந்து வருகிறது. மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாகியுள்ளது

*இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு ஒரு உதாரணம். இந்தி சினிமாக்கள் மிகவும் கற்பனைத்தன்மையுடன் எடுக்கப்படுகின்றன. கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தில் இந்தியா - அமெரிக்கா தனிச்சிறப்பு நாடுகள்.

*விராட் கோலி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்தி சினிமாத்துறை உலக அரங்கில் செழிப்பான ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் இந்தி சினிமாக்கள் விரும்பி பார்க்கப்படுகின்றன

*இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் ஒற்றுமையாக வசிக்கின்றனர்.இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது.

*மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்று வந்ததை பெருமையாக கருதுகிறோம். அமெரிக்க வளர்சிக்கு பங்களிப்பு அளித்து வரும் இந்திய வம்சாவழியினருக்கு நன்றி

*இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச உள்ளேன். இந்திய மக்களுக்காக இரவு-பகலாக மோடி உழைத்து வருகிறார்.

*3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகிறது. தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு விற்க உள்ளோம்.விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயல்படும்.

*அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவ கூட்டாளியாக இந்தியா இருக்க வேண்டும்.இந்தியா-அமெரிக்கா நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

*ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு வந்துக் கொண்டிருக்கிறோம்.ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பாக்தாதியை அமெரிக்கா அழித்துவிட்டது.

*பாதுகாப்பு காரணங்களுக்காகவே அமெரிக்கா வருவதற்கு கட்டுப்பாடுகள் அதிகம். தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்.தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்தியா நல்ல தலைமையை கொண்டுள்ளது.பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வருகிறேன்.பாக்., எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

*டைகர் டிரயல் என்ற பெயரில், இரு நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி நடைபெறும். ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கப்பல் கட்டுவதில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு தரப்படும்.

*மிகச்சிறப்பான வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ளது.இந்தியா-அமெரிக்காவிற்கு நன்மை தரும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் இருக்கும்.

*இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு மிகச்சிறந்த சந்தையாக இந்தியா உள்ளது.

*இந்தியாவின் சந்திரயான் திட்டங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை.இந்தியா மிகவும் செழுமையான தேசமாக திகழ்கிறது.ஒளிமயமான எதிர்காலத்திற்கு மக்கள் இணைந்து செயல்பட வேண்டும்

*இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறி உரையை முடித்தார் டிரம்ப்

இந்திய மண்ணில் கால் பதித்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார்.அதன் பின்னர் டிரம்ப் இணையருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இணைந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அமெரிக்க அதிபர், இரு புறமும் அரங்கேறிய பாரம்பரிய நடனங்களை பார்வையிட்டார்.பின்னர் அங்கு தயாராக நின்றிருந்த பீஸ்ட் காரில் ஏறி அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் சபர்மதி ஆசிரமம் நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழி எங்கும் அவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. சபர்மதி ஆசிரமத்தை வந்தடைந்த ட்ரம்ப் தம்பதிக்கு, அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த பிரதமர் மோடி கைத்தறி துண்டு அணிவித்து வரவேற்றார்.தொடர்ந்து ஆசிரமத்திலுள்ள நூல் நூற்கும் ராட்டை குறித்து பிரதமர் மோடி, ட்ரம்ப் தம்பதியினருக்கு விளக்கி கூறினார். அவரை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் ராட்டையை இயக்குவது குறித்து எடுத்துக் கூற, அமெரிக்க அதிபர் மனைவி மெலானியாவுடன் இணைந்து ராட்டையை இயக்கினார்.சபர்மதி ஆசிரம நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேராவுக்கு அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் புறப்பட்டு சென்றனர்.

Tags : Trump Unity ,Indian ,US ,God ,India ,President , US President, Donald Trump, India, Ivanka, Melania, Ahmedabad
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...