×

கார் விபத்தில் உயிரிழந்த மேலாளர் குடும்பத்துக்கு 2.37 கோடி இழப்பீடு

சென்னை,: சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் மேனகா குலுவாடி (37). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 24.3.2016 அன்று மாலை 6.20 மணியளவில், பெங்களூரு பெல்லாரி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து மேனகா மீது மோதியது.  இதில், படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த மேனகாவின் பெற்றோர், இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி உமா மகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேனகா பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். மாதம் 1 லட்சத்து 87 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்துள்ளார். இவரது இறப்பு அவரது பெற்றோருக்கு பெரிய இழப்பு. எனவே, இறந்த மேனகாவின் வயது மற்றும் மாத சம்பளம் ஆகியவற்றை வைத்து, அவரது குடும்பத்தினருக்கு 2 கோடியே 37 லட்சத்து 42 ஆயிரத்து 400 இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

Tags : manager ,car accident , 2.37 crores, compensation family of manager , car accident
× RELATED சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு