×

டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் பாண்டியன் நகர் பல்லவன் சாலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவகுமார் (23) என்பவரை, பணம் திருட்டு தொடர்பான தகராறில் அடித்து கொலை செய்த காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த மெக்கானிக் கோவர்தன் (20) மற்றும் இவரது கூட்டாளிகளான செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை  சேர்ந்த விமல் (எ) தவன் (19), கண்ணகி நகர் எழில் நகரை  சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த அஜித்குமார் (20) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : murder Driver , Driver killed, one more person arrested
× RELATED போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம்...