டிஜிட்டல் உலகில் எவ்வளவோ பயன்கள் உள்ளன. ஆனால், அபாயங்கள், விபரீதங்களும் உண்டு. இப்படிதான் சமுதாயத்தை சீரழிக்கும் செயலியாக மாறி வருகிறதோ என்ற சந்தேகம் டிக் டாக் ஆப் மீது ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் டிக் டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். இதில் 5 கோடி பேர் இந்தியர்கள். பல நாடுகளில் டிக் டாக் செயலியை நல்ல விஷயங்களுக்கு, விழிப்புணர்வுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்ைத பொறுத்தவரை, குக்கிராமங்கள் வரை டிக் டாக் புற்றீசல் போல பரவி உள்ளது. 15 விநாடிகளில் பரபரப்பை ஏற்படுத்தி விடலாம் என்பதால் பலரையும் ஈர்த்து வருகிறது. இதற்கு பெரும்பாலும் பலி வாங்கப்படுவது பெண்கள்தான். பெரம்பலூர்: சிங்கப்பூரில் கைநிறைய சம்பாதிக்கும் கணவன். மனைவி டிக் டாக்கில் வெறியாக இருப்பவர். வேண்டாம் நமக்கு என்று சொல்லிப் பார்த்தார்; திட்டிப்பார்த்தார்; விளைவு, விஷம் குடித்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு தற் ெகாலை செய்தார் மனைவி அனிதா.