ஏடிஎம் மையத்தை உடைக்க முயன்ற இருவர் கைது

நெல்லை: பாளையங்கோட்டை சாந்திநகர் மெயின்ரோட்டிலுள்ள பெல் அமோர்சஸ் காலனியில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 3 மணிக்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஏடிஎம் மையத்தின் பூட்டை  உடைத்து உள்ளே சென்று, ஏடிஎம்மைஉடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது மும்பையில் உள்ள வங்கியில் தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக  நெல்லை மாநகர போலீசுக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் விரைந்து சென்று ஏடிஎம் மையத்தின் உள்ளே இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த இருவரையும் பிடித்தனர்.  விசாரணையில் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், முத்து என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார்  கைது செய்தனர்.

Related Stories: