பெருந்துறை: கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாமென சந்தேகத்தின் பெயரில் ஐ.ஆர்.டி. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மருத்துவர் தனி வார்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்; தற்போது, அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிசென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாகசீனாவில் உள்ள உருமச்சி என்ற ஊரில் சின்ஜியங் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து முடித்தார். பட்டம் பெறாத நிலையில் கடந்த 15ம் தேதி சொந்த ஊரான பெருந்துறைக்கு திரும்பி வந்துள்ளார். தொடர்ந்து சளி தொல்லை அதிகமானதால் 21ம் தேதி பெருந்துறை ஐ.ஆர்.டி. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவர் சீனாவிலிருந்து வந்தது தெரியவந்ததால் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரி எடுத்து அதை சென்னையில் உள்ள கொரோனா வைரஸ் செல்லுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.