×

அமைச்சர் தகவல் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்

திருச்செங்கோடு:  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா எலச்சிப்பாளையத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மின்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.  பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் மொத்தம் 6,715  மதுக்கடைகள் இருந்தன. படிப்படியாக அவை குறைக்கப்பட்டு, தற்போது 5,262  கடைகள் உள்ளன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து  வெளியேற்றப்படும் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஏரிகளை நிரப்பும் வகையில் திட்டமிடப்பட்டு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் காவிரி நீரை நிரப்புவதற்கான திட்டத்திற்கு  நிதி ஒதுக்கப்படும்  என்றார்.



Tags : liquor stores , Minister, Bars,gradually ,reduced
× RELATED நாகை மாவட்டத்தில் நாளை, அக்.2ல் டாஸ்மாக் விடுமுறை