சேலம்: சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள், 3 குழுவாக முகாமிட்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் பதுங்கியுள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தவுபீக், அப்துல் சமீம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உதவிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் தொடர் விசாரணையில் ஈடுபட்டிருந்த என்ஐஏ அதிகாரிகள் நேற்று 3 குழுக்களாக சேலம் வந்தனர். அவர்கள், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் ஒரு குழுவாகவும், மாநகர பகுதியில் 2 குழுவாகவும் பிரிந்து முகாமிட்டு ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.