போலீஸ் கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்ட தொழிலதிபர் உட்பட 8 பேருக்கு குண்டாஸ்

சென்னை: போலீஸ் கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் உட்பட 8 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டு பெட்ரோல் நிலையம் தொடங்க உரிமம் புதுப்பித்த அகரம் கணக்கர் தெருவை சேர்ந்த தொழிலதிபர் ஜெயபிரகாஷ் (49), ஆர்.கே.நகர் டாக்டர் ராதாகிருஷ்ணன் 2வது  தெருவை சேர்ந்த சிவகுமார் (47) மற்றும் கஞ்சா வழக்கில் தொடர்புடைய காமராஜர் சாலை அண்னை சத்யா நகரை சேர்ந்த அக்பர் பாஷா (எ) அக்பர் (25), பாஸ்மின்பானு (எ) நாகவள்ளி (23), வியாசர்பாடி கல்யாணபுரம் 3வது தெருவை சேர்ந்த  ஆகாஷ் (25), கொலை வழக்கில் தொடர்புடைய எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த ராம்கி (30), நாகராஜ் (எ) பாம்பு நாகராஜ் (28),  ஜான் அலெக்சாண்டர் (47) ஆகிய 8 பேரை போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி போலீசார் குண்டர்  சட்டத்தில் கைது ெசய்தனர்.

Related Stories: