சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியாக சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக அபாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.