அவிநாசி: அவிநாசி அருகே கேரள அரசு பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்கு, பொதுமக்கள் நேற்று இரவு அவிநாசி புதிய பஸ் நிலையம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மலரஞ்சலி செலுத்தினர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து 48 பயணிகளுடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்ற கேரள அரசு பேருந்து மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். இந்த கோர விபத்து, பொதுமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விபத்தால் உயிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தி ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தனர்.
அவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி: தடுப்புச்சுவரை உயர்த்த சமூக ஆர்வலர்கள் கருத்து
- மெழுகுவர்த்தி வைத்திருப்பவர்கள்
- சமூக ஆர்வலர்கள்
- மெழுகுவர்த்தி
- விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
- வைத்திருப்பவர்கள்