அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு அளிக்கப்பட இருக்கும் இரவு விருந்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான விருந்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் விருந்தில் கலந்து கொள்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு அதிபரை இந்தியா வருமாறு அழைத்துள்ளார். அதனையேற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மணைவி மெலானியா டிரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக நாளை இந்தியா வரவுள்ளனர். அவர்களது பயணத்தில் முக்கியமாக குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபரை வருகையையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் அலங்கரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் விருந்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையேற்று, நாளை மாலை முதல்வர் பழனிசாமி டெல்லி செல்லவுள்ளார்.

Related Stories: