நெல்லை: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏவிடம் தனிப்படை போலீஸ் ஒப்படைத்தது. வில்சன் கொலை வழக்கு விசாரணைக்காக தக்களையில் தனி அலுவலகம் திறக்க உள்ளது என்ஐஏ. கடந்த மாதம் 8-ம் தேதி களியக்காவிளை சோதனைச்சாவடியில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் மீண்டும் 15 நாள் நீதிமன்றக்காவல் விதித்திருந்தது. 10 நாள் காவல் முடிவடைந்த பிறகு கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், துல்பீக் இருவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ.வில்சன் கடந்த 8-ம் தேதி இரவு பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த அன்று இரவு முழுவதும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் போலீஸை கொலை செய்தவர்கள் பயங்கரவாதிகள் தெளஃபிக், அப்துல் சமீம் எனத் தெரியவந்தது. அவர்கள் கொலை செய்துவிட்டு பள்ளிவாசல் வழியாகத் தப்பி ஓடும் சி.சி.டி.வி காட்சிகளும் பதிவாகின.