கொடைக்கானல்: விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். மலைகளின் இளவரசியான திண்டுக்கம் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. விடுமுறை தினத்தை கொண்டாடும் விதமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். கொடைக்கானல் தூண் பாறை பகுதியில் மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் தூண்பாறையை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.