துறையூர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கிய காலாவதியான மாத்திரையை சாப்பிட்ட தொழிலாளிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. துறையூர் அருகே உள்ள வெங்கடம்மாள்சமுத்திரத்தை சேர்ந்தவர் சிவபாலகுமார் (44). இவருக்கு மனைவி பூபதி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் எரகுடி நில அளவையரிடம் உதவியாக கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென இதய ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டதால் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அருகில் இருக்கும் எரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சை பெற்று மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகிறார்.இந்நிலையில் கடந்த 20ம் தேதி எரகுடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் ஆலோசனை பெற்று விட்டு 15 நாட்களுக்கு மாத்திரை வாங்க வந்தார். அப்போது மருந்தாளுனர் இல்லாததால் அங்கு கட்டு கட்டுபவர் கொடுத்த மாத்திரையை வாங்கி கொண்டு சென்றார். சிவபாலகுமார் 3 வேளை, மாத்திரையை சாப்பிட்டார்.