பழநி: பழநி அருகே ஆயக்குடி அரசு பள்ளியில் தண்ணீர் தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள தரைநிலை தொட்டியை மாணவர்கள் சிலர் சுத்தம் செய்வது போன்ற வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் தொட்டியின் மேல்புறம் 3 மாணவர்கள் நின்று தண்ணீரை இறைத்து கொண்டிருக்கின்றனர்.