விழுப்புரம்: விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது தொடர்பான வழக்கில், மத்தியஅரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள வழக்கறிஞர் தனது வரம்பை மீறி பேசியிருக்கிறார். 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின்மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.