சேலம் அருகே கார்கள் மோதல் தாய், மகள் பலி

ஈரோடு: சேலம் மாவட்டம் பழைய  சூரமங்கலம் பகுதியை சேர்ந்த விஜயவர்மன் மனைவி கவுரி (33). இவர் தாய்  ஜோதி (55) மற்றும் உறவினர்கள் உட்பட 11 பேருடன் மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவை ஈஷா யோகா மையத்திற்கு நேற்று முன்தினம் காரில் சென்றார். அங்கு விழா முடிந்து சேலம் திரும்பி கொண்டிருந்த போது,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த நசியனூர் ஆட்டையாம்பாளையம் பிரிவு அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரை கடந்து எதிர் ரோட்டில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கவுரியும், ஜோதியும் இறந்தனர். 7 மாத குழந்தை உட்பட 7 பேர் படுகாயம் அடைந்து  சிகிச்ைச பெற்று வருகின்றனர்.

Related Stories: