* விருகம்பாக்கம் காந்தி நகர் பெரியார் தெருவில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்ற சாலிகிராமம் தேவர் தெருவை சேர்ந்த அஜித்ராஜ் (21), ஆனந்தபாலன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* அரும்பாக்கம் 100 அடி சாலை சந்திப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (21), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பிருந்தாவனம் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.