×

சென்னை கிரைம்

* விருகம்பாக்கம் காந்தி நகர் பெரியார் தெருவில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்ற சாலிகிராமம் தேவர் தெருவை சேர்ந்த அஜித்ராஜ் (21), ஆனந்தபாலன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* அரும்பாக்கம் 100 அடி சாலை சந்திப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (21), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பிருந்தாவனம் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

* ஐசிஎப் காந்தி நகரை சேர்ந்த ஆழ்வாரம்மாள் (75), நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் 3வது மாடியில் நடந்து சென்றபோது, திடீரென தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இறந்தார்.
* ராமாபுரம் பூத்தப்பேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வெங்கட் ரெட்டி (25), நேற்று அதிகாலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர், இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.5 ஆயிரம் மற்றும் 2 ஏடிஎம் கார்டுகளை பறித்து சென்றனர்.


Tags : Chennai Crime
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...