துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், பல்லவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேவநாதன்(23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து காவல் நிலையத்தில கொடுத்த புகாரின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு காரப்பாக்கம், ஓடையில் எலும்பு கூடாக ஒரு சடலம் கிடப்பதாக, தகவல் வந்தது. இதனையடுத்து கண்ணகிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.