×

துரைப்பாக்கத்தில் வாலிபர் அடித்து கொலை

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், பல்லவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தேவநாதன்(23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து காவல் நிலையத்தில கொடுத்த புகாரின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு காரப்பாக்கம், ஓடையில் எலும்பு கூடாக ஒரு சடலம்  கிடப்பதாக, தகவல் வந்தது. இதனையடுத்து கண்ணகிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில், அவர் துரைப்பாக்கத்தில் மாயமான தேவநாதன் என்பது உறுதியானது. மேலும், பணப் பிரச்னை காரணமாக நான்கு பேர் கொண்ட கும்பல் அவருக்கு மது வாங்கி கொடுத்து, அடித்து கொலை செய்து ஓடையில் வீசியதும் தெரியவந்தது. இதுகுறித்து கண்ணகிநகர் போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags : Durapakkam, the plaintiff slaughtered
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...