சென்னை: சிவராத்திரியை முன்னிட்டு சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அப்போது, கூட்டத்தை பயன்படுத்தி சைதாப்பேட்டையை சேர்ந்த சரஸ்வதி (65), சாந்தி (65) ஆகிய இருவரிடமும் 8 சவரன் செயினையும், பல்லாவரத்தை சேர்ந்த அபிராமி (25) என்பவரிடம் 8 சவரன் செயினையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.